வவுனியாவில் உணவு கையாளும் நிலையங்களின் பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை அவசியம்!!

520

Medical

வவுனியாவில் இயங்கும் அனைத்து உணவகங்களில் பணியாளர்களாக கடமையாற்றும் ஊழியர்கள், அனைவரும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உணவு கையாளும் நிலையங்களின் ஊழியர்களாக பணிபுரிபவர்கள் தமது மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு சான்றிதழ்களை பெற்ற பின்னரே உணவு கையாளும் நிலையங்களில் பணிக்கு அமர்த்தப்படவேணடும் என்றும், அதற்கு உணவு நிலையங்களின் உரிமையாளர்கள் ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தமது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் மேலும் தெரிவித்துள்ளார்.