வவுனியா வடக்கு புதிய வேலர்சின்னக்குளம் ஆனந்தகுமாரசாமி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டியும் பாடசாலையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவும் பாடசாலையின் அதிபர் திரு.மு.ஜெயசீலன் தலைமையில் நேற்று (03.03.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிறப்பு விருந்தினராக வடக்குமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, கெளரவ விருந்தினராக கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.தா.அமிர்தலிங்கம் (ஒமந்தைக்கோட்டம்), உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.S.ராஜேஸ்வரன் மற்றும் கோட்டக்கல்வி அலுவலக அதிகாரிகள், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






