வவுனியா நெளுக்குளம் பகுதியில் தீயினால் அழிவடைந்த வீட்டை பார்வையிட்ட பா.உ. கே.கே.மஸ்தான்!!

505

 
வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று (04.03.2016) காலை 10.30 மணியளவில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. நெளுக்குளம்- கூமாங்குளம் வீதியில் அமைந்துள்ள குறித்த வீடு சமையல் அறையிலிருந்த நெருப்பு அதிக காற்று காரணமாக பரவியாதால் தீப்பற்றி முற்றாக எரிந்துள்ளது.

இத் தீயினால் ஆடைகள், சமையலறைப் பொருட்கள், வீட்டு உடைமைகள் என சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
.
இச் சம்பவத்தை அறிந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வன்னி அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் குறித்த வீட்டிற்குச் சென்று பார்வையிட்டு, முதற்கட்ட உதவியைச்செய்ததுடன் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படி பணித்துள்ளார்.

1 2 3 4