போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கை வர முயன்ற ஐவர் சென்னை குடியுரிமைத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து, இலங்கைத் தலைநகர் கொழும்பு செல்லும் விமானம் நேற்று முன்தினம் இரவு 11:55 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.
இந்த விமான பயணிகளின் கடவுச்சீட்டுக்களை குடியுரிமைத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த செந்திவரன் 32, நாகராஜ் 73 மற்றும் மதிவதனா 53 ஆகியோர் போலி விசா வைத்திருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் மூவரும் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை பங்களாதேஷைச் சேர்ந்த முகமது குலாம் ரபானி 27, முகமது முரோல் அப்தின் 32, ஆகியோர் நேற்று காலை 7 மணிக்கு “ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ்´ விமானம் மூலம் கொழும்பு வர சென்னை விமான நிலையம் வந்தனர்.
இருவரின் கடவுச்சீட்டுக்களும் போலி என்பது விசாரணையில் தெரியவந்தது.
இருவரும் கைது செய்யப்பட்டு, விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.