சுரங்கம் தோண்டிய 10 பேர் கைது!!

257

arrest (1)

சட்டவிரோதமான முறையில் சுரங்கம் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 பேர் நிவிதிகல – தோலஸ்வல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கஹவத்தை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதன்போது சுரங்கம் தோண்டப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி மாணிக்கக்கல் மற்றும் சுவர்ணாபரண அதிகார சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.