ஜன்னல் கண்ணாடியொன்றினால் வெட்டுக்காயத்திற்கு இலக்கான நிலையில் நபரொருவர் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவமொன்று மீரிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.ஜன்னல் மீது தாக்குதல் நடத்தியதாலேயே குறித்த நபருக்கு வெட்டுக்காகயம் ஏற்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,
119 அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்றுள்ள பொலிஸார் குறித்த நபரை கடுமையான வெட்டுக்காயத்திற்கு இலக்கான நிலையில் அதிக குருதி வெளியேறிக்கொண்டிருந்த போது மீட்டுள்ளதையடுத்து அவரை மீரிகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் 60 வயது நிரம்பிய ரங்பண்டா என்றும் மீரிகம அண்ணாசிவத்த பகுதியை சேர்ந்தவர் என்றும் பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் தமது வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். குடும்பத்தவர் எவரும் நீண்ட நேரம் வீட்டில் இல்லாமையினால் ஏற்பட்ட முன்கோபத்தினை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் வீட்டு ஜன்னல் கண்ணாடியை காலால் உதைத்துள்ளார்.அதனால் அதிகம் இரத்தம் வெளியேறியுள்ளதையடுத்து குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.