வவுனியாவில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழப்பு!!

675

Cobra

வவுனியா கூமாங்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாம்பு கடிக்குள்ளான ஒருவர் சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெரிசாமி உலகநாதன் (56வயது) கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் படுத்திருந்த போது விஷப்பாம்பு கடித்துள்ளது. உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

எனினும் நேற்று முன்தினம் 4ஆம் விடுதிக்கு வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நகர திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் மரண விசாரனையினை மேற்கொண்டதுடன் சடலத்தினை உறவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.