மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு, இராஜபுரம், கெவிலியாமடு, கித்தூள் போன்ற இடங்களில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 10இற்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 50இற்கு மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட இடங்களை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர்,கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.