வவுனியா கந்தசாமிகோவில் வீதியில் இன்று(12.03.2016) மாலை இடம்பெற்ற பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா கந்தசாமிகோவில் வீதியூடாகப் பயணித்த மோட்டார் சைக்கில் சூசைப்பிள்ளையார்குளம் சந்தியிலிருந்து சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-கோபி-






