வெற்றிக்கு காரணம் தோனி : விராத் கோலி!!

337

kohli

சிம்பாவேக்கு எதிரான 5 ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று முத்திரை பதித்தது. சிம்பாவேக்கு எதிரான ஒருநாள் தொடரை 5–0 என்ற கணக்கில் வென்றது குறித்து தற்காலிக தலைவர் வீராட் கோலி கூறியதாவது,

சிம்பாவே தொடர் வெற்றிகரமாக முடிந்தது. இதற்கு தோ​னியே காரணம். ஆடுகளத்தில் எப்படி செயல்படுவது என்பது பற்றிய யூக்தியை அவரிடம் இருந்து கற்றேன். இதை பயன்படுத்திய நான் சிறப்பாக செயல்பட்டேன். இந்த அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் இருந்ததால் எனக்கு தலைவர் பதவி கடினமாக தெரியவில்லை. இவ்வாறு வீராட் கோலி கூறியுள்ளார்.

இந்த தொடரில் சுழற்பந்து வீரர் அமித் மிஸ்ரா 18 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் ஒரு தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய முன்னாள் வேகப்பந்து வீரர் ஸ்ரீநாத்தின் சாதனையை சமன் செய்தார்.