வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் சுகாதார ஊழியர்கள், சாரதிகள், மற்றும் சிற்றூழியர்களின் பிள்ளைகள் 35 பேருக்கு ஸ்கொட்லாந்து வாழ் கமலசீலன் அவர்களின் அனுசரணையில் தமிழ் விருட்சத்தால் கற்றல் உபகரணங்கள் நேற்று (13.03.2016) நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய அதிபர் சு.கிருஷ்ணராஜன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் அகில இலங்கை பொது ஊழிய சங்க தலைவரும் ஏற்பாட்டாளருமான தே.நாகராசா, முன்னாள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் க.தர்மலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் சுகாதாரஊழியர்கள், சாரதிகள், மற்றும் சிற்றூழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






