வவுனியாவில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் இன்று (15.03.2016) வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் ஆலோசனைக்கு அமைய தேசிய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் வவுனியா காமினி மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது, பல்வேறு வர்த்தக நிலையங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை காட்சிப்படுத்தியதுடன் விற்பனையிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிகழ்வில் வர்த்தக வாணிபத்துறை கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார, பிரதேச செயலாளர் கா.உதயராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான ஏ.ஜெயதிலக, ரிப்கான் பதியுதீன், தர்மபால செனவிரத்தின உட்பட பலரும் கலந்துகொண்டனர்.










