வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது!!

1003

Puthu

வவுனியா வடக்கு கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் அனைத்துப் பிரிவிலும் புதுக்குளம் மகாவித்தியாலய அணி கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.

கனகராயன்குளம் மகா வித்தியாலய மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இறுதியாட்டங்கள் நடைபெற்றன.

15 வயதினருக்கான இறுதியாட்டத்தில் புதுக்குளம் மகாவித்தியாலய அணியை எதிர்த்து கனகராயன் குளம் மகாவித்தியாலய அணி மோதியது. முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளாலும் கோல் எதனையும் பதிவுசெய்ய முடியவில்லை. இரண்டாம் பாதியிலும் இதே நிலைமை நீடித்தது.

ஆனால் ஆட்டம் முடிவடைவதற்கு ஒரு நிமிடம் இருக்கும் போது புதுக்குளம் மகாவித்தியாலய அணி ஆட்டத்தின் ஒரே கோலைப் பதிவுசெய்து கிண்ணம் வென்றது.

17வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் புதுக்குளம் மகாவித்தியாலய அணியை எதிர்த்து தரணிக்குளம் கனிஷ்ட வித்தியாலய அணி மோதியது. இதில் இரு அணிகளும் ஆட்டம் முடிவடையும் வரை கோல் எதனையும் பதிவு செய்யவில்லை.

இதனால் சமநிலை தவிர்ப்பு உதைகள் மூலம் கிண்ணம் தீர்மானமாகும் நிலைமை. சமநிலைத் தவிர்ப்பில் புதுக்குளம் மகாவித்தியாலய அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

19 வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் புதுக்குளம் மகாவித்தியாலய அணியை எதிர்த்து தரணிக்குளம் கனிஷ்ட வித்தியாலய அணி மோதியது. இதில் ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய புதுக்குளம் மகாவித்தியாலய அணி, ஆட்டநேர முடிவில் 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.