
வவுனியா மாவட்ட மெய்வன்மைச் சங்கம் நடத்தும் இளையோருக்கான தடகளப் போட்டிகளும் திறந்த வயதுப்பிரிவினருக்கான அஞ்சல் ஓட்ட நிகழ்வுகளும் எதிர்வரும் 19 ஆம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளன.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான இளையோர் விளையாட்டு நிகழ்வில் 100 மீற்றர், 400 மீற்றர், 1,500 மீற்றர் ஓட்டப் போட்டிகளும் அஞ்சலோட்ட நிகழ்வுகளும் முப்பாய்ச்சல், நீளம் பாய்தல், குண்டு போடுதல் மற்றும் தட்டெறிதல் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
திறந்த வயதுப் பிரிவினருக்கான போட்டியில் அஞ்சலோட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதில் பங்குபற்ற விரும்புவோர் தமது விண்ணப்பங்களை 16 ஆம் திகதிக்கு முன்பாக மெய்வன்மைச் சங்கத்திடம் ஒப்படைக்குமாறு வவுனியா மாவட்ட மெய்வன்மைச் சங்கச் செயலாளர் கே.விஜிதரன் அறிவித்துள்ளார்.





