வவுனியா நகரசபையில் கடமைபுரியும் சுகாதார ஊழியர்களின் பிள்ளைகள் 48 பேருக்கு வவுனியா நகரசபையின் ஊழியரும், சகாயமாதாபுரம் சனசமுக நிலைய தலைவருமான ஜோன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ) அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ராம் பவுண்டேசன் மூலம் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியா சகாயமாதாபுரத்தில் வசிக்கும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கே, சகாயமாதாபுரம் சனசமுக நிலைய கட்டிடத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்க பட்ட இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ,வவுனியா நகரசபையின் ஊழியரும் சகாயமாதாபுரம் சனசமுக நிலைய தலைவருமான ஜோன், வவுனியா நகரசபையின் ஊழியரும், சகாயமாதாபுரம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவருமான திருச்செல்வம், சகாயமாதாபுரம் சனசமுக நிலைய செயலாளர்
கலிஸ்டன், பொருளாளர் அஸ்வினி, உபசெயலாளர் நிமல்ராஜ், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் சிவபாலன், ஊடகவியலாளர் காந்தன் உட்பட ஊழியர்கள், பிள்ளைகள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






