வடமாகாண சபையும், மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் குறைநிவர்த்தி செய்யும் நடமாடும் சேவையானது இன்று (16.03.2016) காலை 09.00 மணி தொடக்கம் 04.00 மணிவரை வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் பான்ட் வாத்தியம் முழங்க அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டது. இதன் பின்னர் காணி உறுதிப் பத்திரங்கள், மற்றும் மாவட்ட செயலாளரின் மேற்பார்வையில் நடைபெற்ற குலுக்கல் முறையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 150 000 காசோலையும் வழங்கப்பட்டது.
வடமாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பினை நாம் பெறுப்பேற்ற பின்னர் வடமாகணத்தில் பல பாகங்களிலும் நாடமாடும் செவைகளை நடாத்தி அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்குறிய தீர்வுகளை விரைவாக பெற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை செய்து வருகின்றோம்.
அந்தவகையில் வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவிலே நடமாடும் சேவை நாடத்தப்படுகின்றது. நடமாடும் சேவை மக்களின் தேவைகளை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு நடத்தப்படுகின்றது என வடமாகாண சபை முதலமைச்சரின் வாழ்த்துச் செய்தியினை வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாணசபை முதலமைச்சரின் சார்பாக வடமாகான கல்வி அமைச்சர் குருகுலராஜா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜா, ம.தியாகராஜா, இ.இந்திரராசா, மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கௌரவ முதலமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் , செட்டிக்குளம் பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






