வவுனியா ஏ9 வீதியில் ஒமந்தை மத்திய மகாவித்தியாலயம் பாடசாலைக்கு அருகில் வயல்வெளியில் இன்று காலை 10.15 மணியளவில் வாகனம் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வான் ஒன்று ஒமந்தை பகுதிக்கு அருகே காணப்படும் வயல்வெளியில் தரண்புரண்டதில் 4பேர் சிறு காயங்குள்ளானர்கள்.
அதிக வேகத்தில் பயணித்ததின் காரணமாக இவ் விபத்து இடம்பெற்றதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.








