ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.
ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இதில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நேற்று ஜேர்மனியில் உள்ள மான்செங்லாட்பாக் நகரில் நடைபெற்றது.
இதில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்றது. இதன் மூலம் ஜூனியர் மகளிர் ஹொக்கி உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா முதன் முதலாக பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய அணி வீராங்கனை ராணி(18) அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.