வவுனியா வெண்கல செட்டிக்குளம் கோட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று (17.03.2016) வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா மகாவித்தியலயத்தில் வெண்கலச்செட்டிக்குளம் கோட்டக்கல்வி பணிப்பாளர் ச.யேசுதாசன் தலமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களாக இ.இந்திரராசா, ம.தியாகராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.






