வரட்சியால் மூடப்படும் தொழிற்சாலைகள்!!

587

thermometer

கடந்த சில மாதங்களாக நிலவிவரும் கடும் வரட்சியால் தேயிலைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதையடுத்து நாடெங்கும் 53 தேயிலைத் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.காலி மாவட்டத்தில் 35 தொழிற்சாலைகளும், கண்டி மாவட்டத்தில் 12 தொழிற்சாலைகளும், மாத்தறை மாவட்டத்தில் 06 தொழிற்சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அத்தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் மந்த நிலையில் இயங்கி வருவதாகவும் வரட்சி தொடர்ந்து நீடித்தால் அவற்றை மூடவேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.அவ்வாறே கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இதேநிலை தோன்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.