இந்தோனேசியாவில் புத்த கோவிலில் குண்டு வெடிப்பு..!

344

indoஇந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள புத்த கோவிலில் ஜன்னல் கதவு அருகில் பதுக்கி வைத்திருந்த குண்டு திடீரென்று வெடித்தது. சற்று நேரத்தில் மற்றொரு குண்டில் இருந்து புகை கிளம்பியது. ஆனால் அது வெடிக்கவில்லை.

இச்சம்பவத்தில் ஜன்னல் பகுதி சேதம் அடைந்தது. ஒருவர் லேசான காயம் அடைந்தார். குண்டு வைத்தது யார், காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகிறார்கள்.