110 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – இருவர் வைத்தியசாலையில்!!

246

1 (50)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து களுத்துறை – அலுத்கம பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி 110 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில், ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து நேற்று (10) மாலை 06.30 மணி அளவில், நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதியின் கவனயீனமே விபத்துக்குக் காரணம் எனவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.இதில் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.லொறியில் இருந்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்கறி வகைகளை நானுஓயா பொலிஸாரின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.