இந்திய கிரிக்கெட் அணியை பலமாக்கியவர் கங்குலி : ஸ்டீவ் வோ பாராட்டு!!

324

Steve-Waugh

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய அணி முன்னாள் தலைவர் கங்குலியை விமர்சித்து இருந்தார். தற்போது அவர் அதில் இருந்து பல்டி அடித்து கங்குலியை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டீவ் வோ கூறியதாவது,

கொல்கத்தா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கங்குலி தான். அவர் ஒரு சிறந்த தலைவர். இந்திய அணியை பலமான அணியாக உருவாக்கியவர் ஆவார். கங்குலியும், டோனியும் வித்தியாசமான தலைவர்கள். ஆனால் இருவருமே சிறந்தவர்கள்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3வது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி நன்றாகவே ஆடியது. இளம் வீரர்களை கொண்ட அவுஸ்திரேலிய அணி சிறப்பான நிலையை அடைய சில காலம் ஆகும். 0–2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும். அவுஸ்திரேலிய அணி இனிவரும் 2 டெஸ்டில் வென்று 2–2 என்ற சமநிலையை அடைவது மிகவும் கடினம்.

20 ஓவர் போட்டியின் ஆதிக்கத்தால் டெஸ்ட் போட்டி அழிந்துவிட்டதாக கூறுவதை ஏற்கமுடியவில்லை. டெஸ்ட் போட்டி உறுதியாகவே இருக்கிறது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரை அதிகமான ரசிகர்கள் ரசித்தனர்.

20 ஓவர் போட்டி இளம் வீரர்களுக்கானது. வீரர்களுக்கு நல்ல பணம் கிடைக்கிறது. ரசிகர்களும் விரும்புகிறார்கள். ஆனாலும் டெஸ்ட் போட்டியின் புகழ் மங்கி விடவில்லை.

தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது டெண்டுல்கர் 200வது டெஸ்டில் விளையாட உள்ளார். அதை மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். இதை யாராலும் முறியடிப்பது கடினமே என ஸ்டீவ் வோ மேலும் தெரிவித்தார்.