சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்..!

673

arrest1முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, கர்ப்பிணியாக்கிய சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

அயல் வீட்டில் வசித்து வரும் சந்தேக நபர், வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

சிறுமி வயிறு பெருத்திருப்பதை அவதானித்த தாய், சிறுமியிடம் காரணத்தை கேட்ட போது, அயல் வீட்டை சேர்ந்த நபர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரிடம் தாய் முறைப்பாடு செய்ததை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி 08 மாத கர்ப்பிணியாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.