உயிருக்கு ஆபத்து என்ற போதும் மீசையை வெட்டாது அடம்பிடிக்கும் அதிசய நபர்!!

347

afridi

பாகிஸ்தானில் வாழும் ஒரு நபர் உயிருக்கு ஆபத்து வந்த வேளையிலும் தனது மீசையை வெட்டாமல் அதனை தொடர்ந்து வளர்த்து வருகிறார்.
பெஷாவரில் வசித்து வருபவர் முகமது கான் அப்ரிடி 48 வயதான இவர் உணவை விட முக்கியமானதாக கருதுவது அவரது மீசையை.

தினமும் அவரது மீசையை பராமரிக்க சுமார் அரை மணி நேரம் செலவழிக்கும் அப்ரிடி தனது உயிருக்கு ஆபத்து வந்த வேளையில் கூட இந்த மீசையை வெட்ட மறுத்துவிட்டார்.

சுமார் 30 இன்ச் நீளம் (76 செ.மீ) இருக்கும் அப்ரிடியின் மீசையினால் அவரின் உயிருக்கு 2009 ஆம் ஆண்டு ஆபத்து வந்தது. அப்ரிடியின் மீசையை வெட்ட சொன்ன ஒரு தீவிரவாத இயக்கத்தினர், அவர் மறுத்ததை அடுத்து அப்ரிடியை கடத்தி சென்று ஒரு மாதக்காலம் ஒரு குகையில் அடைத்து வைத்துள்ளனர்.

பிறகு மீசையை வெட்டிவிடுவதாக அப்ரிடி வாக்களித்ததை அடுத்து அவர்கள் அவரை விடுவித்தனர், அவர்களிடமிருந்து தப்பித்த அப்ரிடி தொடர்ந்து மீசையை வளர்த்து வருகிறார். தனது மீசையை குறித்து பேசிய அப்ரிடி, எனது மீசையை நான் என்னுடைய அடையாளமாக கருதுகிறேன். இந்த மீசையால் என்னை நிறைய பேர் மதிக்கிறார்கள்.

இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னால் உணவு சாப்பிடாமல் கூட இருக்க முடியும் ஆனால் எனது மீசை இல்லாமல் இருக்க முடியாது எனக் கூறினார். அப்ரிடி அவரது மீசையை பராமரிப்பதற்கு மாதம் தோறும் அவருக்கு 150 டொலர் செலவாகிறதாம்.