ராஜபக்ச விமானநிலையம் தனியார் மயம்!!

543

mattala-rajapaksa-airport

மத்தளை ராஜபக்ச சர்வதேச விமானத்தளம் இந்த வருட இறுதிக்குள் தனியார்மயப்படுத்தப்படவுள்ளது.இந்த தகவலை உள்ளூர் சிவில் விமானசேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.இதற்காக பல நிறுவனங்களிடம் இருந்து கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சுகுறிப்பிட்டுள்ளது.

எனினும் விமான நிலையத்தை அமைத்த சீனாவில் இருந்து கேள்விகள் சமர்ப்பிக்கப்படவில்லைஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்தளை விமான நிலையத்தை அமைத்தபோது பெறப்பட்ட கடன்கள் தற்போது கட்டுநாயக்கவிமானநிலையத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டே ஈடுசெய்யப்பட்டு வருகிறது.

இந்த விமானநிலையம் 209 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு 2013மார்ச் மாதம் திறக்கப்பட்டது.இதில் சீன அரசாங்கம் 190 மில்லியன் டொலர்களைவழங்கியது.