இலங்கை அணிக்கெதிரான இளையோர் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
இலங்கை வந்துள்ள இந்திய இளம் (19 வயது) அணி மூன்று போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் போட்டியில் பங்கேற்றது.
முதல் இரு போட்டிகள் முடிவில் இந்திய அணி 1-0 என்று முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய கடைசி போட்டி நேற்று தம்புளவில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் தலைவர் விஜய் ஜோல் களத்தடுப்பை தெரிவு செய்தார். இலங்கை அணியின் பானுகா 42 ஓட்டங்களும், பெரேரா 50 ஓட்டங்களும், ரித்மா 23 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களை தாண்டவில்லை.
இலங்கை அணி 39.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது . இந்திய அணி சார்பில் சுழலில் அசத்திய 15 வயது வீரர் சர்ப்ராஸ் கான் 4 விக்கெட் வீழ்த்தினார்.
எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி 32.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அறிமுக வீரர் கஜுரியா 34 ஓட்டங்களும், ஹெர்வத்கர் 25 ஓட்டங்களும், விஜய் ஜோல் 23 ஓட்டங்களும், சஞ்சு சம்சன் 31 ஓட்டங்களும், முகமது சைப் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதையடுத்து இளையோர் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றியது