இரயிலில் பிறந்த குழந்தை: வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்!!

598

baby

ஜேர்மனில் ஒடும் ரயிலில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக ரயிலில் பயணம் செய்யும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு ரயிலில் பயணம் செய்த போது திடீரென்று பிரசவவலி ஏற்பட்டுள்ளது.

அப்போது ரயிலில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்பதால் அதில் பயணம் செய்த இரண்டு பெண்கள் அப்பெண்ணுக்க பிரசவம் பார்த்துள்ளனர்.

இதில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த அப்பெண் தற்போது எலிசபெத் மருத்துவமனையில் தன் குழந்தையுடன் நலமாக உள்ளார்.

இது குறித்து தெற்கு பிராந்திய கிளை தலைவர் பிராங்க் ஹெலின்காபர் (Frank Klingenhöfer) கூறுகையில் அந்தக் குழந்தையானது தனது வாழ்க்கை பயணத்தை ரயிலில் தொடங்கியுள்ளது. இதனால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக ரயிலில் பயணம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.