வவுனியாவில் களைகட்டிய அட்சயதிருதியை!!(படங்கள்)

928

 
நேற்று(09.05.2016) அட்சயதிருதியை முன்னிட்டு வவுனியாவில் நகைமாளிகைகள் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், பெருமளவான பொதுமக்கள் நகைக்கடைகளில் நகைகளினை கொள்வனவு செய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பௌர்ணமி அல்லது அமாவாசைக்குப் பின்னர் வரும் மூன்றாவது திதி திருதியை ஆகும். சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.

எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர்.

அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர்.

news (1) news (2) news (3) news (4) news (5) news (6) news (7) news (8) news (9)