இந்திய அணியில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் சேவாக், கம்பீர்!!

304

shewagh

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக இருந்தவர்கள் வீரேந்தர் சேவாக், கெளதம் கம்பீர். இருவரும் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

வீரேந்த ஷேவாக் மிகச் சிறந்த அதிரடி வீரர். கெளதம் கம்பீரும் மூன்று வகை கிரிக்கெட்டிலும் அசத்தும் வீரர். ஆனால் இருவரும் தற்போது அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.

தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கும் ஷிகர் தவான், ரோகித் சர்மா சிறப்பாக ஆடி வருகிறார்கள். இதனால் ஷேவாக், கம்பீரை தேர்வு குழுவினர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.

கடைசியாக ஷேவாக் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஐதராபாத் டெஸ்டில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடினார். கம்பீர் ஜனவரி மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.

இந்த நிலையில் ஷேவாக், கம்பீர் எதிர்காலம் முடிய வில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் கிரண் மோரே கருத்து தெரிவித்து உள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஷேவாக், கம்பீர் ஓட்டங்களை குவிக்க சிரமபட்டதால் நீக்கப்பட்டனர். அவர்கள் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகின்றனர். ஷேவாக் எதிரணி பந்துவீச்சை நிலைகுலைய வைக்கும் திறமை உள்ளவர். தற்போதும் அவரிடம் அந்த திறமை இருக்கிறது. அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதே நிலையில்தான் கம்பீரும் உள்ளார்.

அவர்களது எதிர்காலம் இன்னும் முடியவில்லை. ரோகித் சர்மா திறமையான வீரர்தான். ஒரு நாள் போட்டியில் சிறப்பாக ஆடுகிறார். ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாட அதிக பயிற்சி தேவை என அவர் மேலும் தெரிவித்தார்.