வவுனியாவில் மின்சாரம் தாக்கி 15 வயது மாணவன் பரிதாபமாகப் பலி!!

585

Minnal

வவுனியா போகஸ்வெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டிற்குள் திருடன் உள்நுழைவதைத் தடுக்கும் முகமாக வீட்டின் உரிமையாளரால் வீட்டின் பின்பக்க கதவுக்கும், யன்னலுக்கும் இடையில் மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தாகவும்.இதனை அவதானிக்காத குறித்த மாணவன் பின்பக்க கதவைதிறக்க முற்படுகையில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர்.