வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது புதிதாக கட்டப்பட்ட 200 கட்டில்களை கொண்ட கட்டிடத்தின் கூரை, படிக்கட்டுக்கள், மின்தூக்கி மீது வெற்றிலை எச்சில், எச்சில்
துப்பப்படுவதனால் கூரை விரைவில் உக்கக்கூடிய நிலையில் காணப்படுகின்றது.
எவ்வாறு எச்சில் துப்புவதால் வைத்தியசாலையின் அழகு கெடுவது மட்டுமன்றி சுகாதார சீர்கேடுகளும் எழுகின்றன. எனவே இதுபோன்ற செயல்களை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் பொதுமக்களின் சொத்துக்களை அவர்கள் தான் பொறுப்புணர்ச்சியுடன் பாதுகாக்க வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.






