வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உதைபந்தாட்டப் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.சுபாஸ்கரன் தலைமையில் நேற்று முன்தினம் (10.05.2016) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இப் பாடசாலையின் முன்னாள் அதிபரும் வவுனியா வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய திரு.அமிர்தலிங்கம், புதுக்குளம் கிராமத்தின் பழைய மாணவனும், மூத்த பிரஜையுமாகிய திரு.பத்மநாதன் மற்றும் அயல் பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.






