
வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள மாணவர்களில் 45 வீதமானவர்கள் போஷாக்கு குறைபாட்டுடன் காணப்படுவதாகவும், போஷாக்கு மட்டத்தினை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளில் பிரதேச அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள், பொதுமக்கள் ஈடுபட வேண்டுமேனவும் வவுனியா வடக்கு சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.
இவ்வாறு போஷாக்கற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு இடம்பெயர்வு, பெற்றோர் விழிப்புணர்வின்றி செயற்படுகின்றமை முக்கிய காரணமாக அமைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலேயே 45 வீதமாக காணப்படுவதாகவும் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளில் 30 தொடக்கம் 35 வீதமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





