அடுத்த ஆண்டு ஐபிஎல் தலைவர் பதவி வகிக்க மாட்டேன் : ராஜீவ் சுக்லா!!

294

rajivஅடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு தலைவராக இருக்க மாட்டேன் என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட பிரச்னை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ஐபிஎல் தலைவர் பதவியை சுக்லா ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவருடைய ராஜிநாமா கடிதம் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் அடுத்த ஆண்டு நிச்சயம் தலைவர் பதவி வகிக்க மாட்டேன் என சுக்லா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் எனது ராஜிநாமா கடிதம் இன்னும் ஏற்கப்படாததால் தான் சம்பியன்ஸ் கிண்ண, T20 கிரிக்கெட் போட்டி தொடர்பான கூட்டங்களுக்கு தலைமையேற்று வருகிறேன்.

ஆனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தலைவராக இருக்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.அந்த பதவிக்கு மீண்டும் வரும் எண்ணமில்லை என்று தெரிவித்துள்ளார்.