கடத்தப்பட்ட இளைஞன் குறித்து விசாரணைகள் ஆரம்பம்!!

500

van

வாரியப்பொல பிரதேசத்தில் கடத்தப்பட்ட இளைஞன் குறித்து விசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட இளைஞன் வாரியப்பொல, மல்வத்த பகுதியில் உள்ள பிரபலதொழிலதிபர் ஒருவரின் மகன் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

கடத்தப்பட்ட சிறுவனை மீட்பதற்காக ரூபா 20 மில்லியன் மீட்பு பணம் செலுத்துமாறுகடத்திய குழு கோரியுள்ளதாக இளைஞனின் தந்தை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

ஒரு வெள்ளை வானில் தனது மகனை ஒரு குழு கடத்திச் சென்றுள்ளதாக இளைஞனின் தந்தைபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடத்திச் செல்லப்பட்ட இளைஞன் 20 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.