வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம்!!

236

 
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம் இன்று(14.05.2016) மாலை 3.30 மணியளவில் முத்தையா மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சமயத்தலைவர்கள், வைத்தியர்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள், அமைப்புக்களின் அங்கத்தவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவோன்று முன்னைய காலத்தில் இயக்கிய சமயத்திலும் அவ் அமைப்பின் நடவடிக்கைகள் அரசியல் சார்ந்து இருப்பதாகவும் எனவே சரியான பிரஜைகள் குழுவொன்று வவுனியா மாவட்டத்திற்குத் தேவை எனக் கருத்தில் கோண்டு இப் புதிய வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப் புதிய வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் அங்குரார்ப்பணம் மற்றும் அங்கத்தவ தெரிவும் இன்று நடைபெற்றது.

அரசியல் கட்சி சார்ந்தவர் அங்கத்தவராக இருக்கலாமா, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசகராக இருக்க வேண்டும், பிரஜைகள் குழுவின் பதிவு , யாப்பு என பல்வேறு வினாக்கள் தொடுக்கப்பட்டன.

புதிய பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இன் நிகழ்வுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

20160514_152033 20160514_152040 20160514_152049 20160514_152105 20160514_152111 20160514_152119 20160514_152134 20160514_152238 20160514_152254 20160514_152259 20160514_153121 20160514_153124 20160514_154813 20160514_154831 20160514_154955 20160514_163219 20160514_165146 20160514_165205 20160514_170027 20160514_170048 20160514_171047 20160514_171052 20160514_171102 20160514_171111 20160514_171119 20160514_171419