இரண்டு கோடி ரூபா கப்பம் கோரி கடத்தப்பட்ட இளைஞன் பொலிஸாரினால் மீட்பு!!

1005

van

இரண்டு கோடி ரூபா கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்ட வாரியபொல பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் நிக்கவரட்டியவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களக்கு முன்னர் 20 வயதான இளைஞர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றிருந்தனர். 20 வயதுடைய மொஹம்மட் ஆசிக் என்ற இளைஞரே, வெள்ளிக்கிழமை இரவு 8.10 மணியளவில் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த கடத்தலின் பின்னர் இரண்டு கோடி ரூபா கப்பம் கோரப்பட்ட நிலையில், குறித்த இளைஞர் நிக்கவரட்டியவில் வைத்து பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.