சீரற்ற காலநிலையால் இருவர் பலி : ஒருவர் காணாமல் போயுள்ளார் : 172 பேர் இடம்பெயர்வு : 6735 பேர் பாதிப்பு!!

456

Flood

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை இருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். இதேவேளை, 1796 குடும்பங்களைச் சேர்ந்த 6735 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 43 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 13 வீடுகள் பகுதியளவிலும் ஒரு வீடு முற்றாகவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.