வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள நொச்சிமோட்டையில் சிறி உபாசகி அம்மையார் ஆன்மீக நிலையம் ஒன்று நேற்று (14.05) காலை 11.00 மணிக்கு வைபவ ரீதியாக சுவாமி சிறிபாலன் தலமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பூந்தோட்டம் சாந்தசோலையில் இயங்கிவந்த சிறி உபாசகி அம்மையார் ஆன்மீக நிலையம் நோச்சிமோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏ9 பாதையில் பயணிக்கும் பக்தர்கள் மற்றும் பயணிகள் இளைப்பாறும் அறையும் கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் இளைப்பாறி செல்ல முடியும் என சிறி உபாசகி அம்மையார் ஆன்மீக நிலையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சிறி உபாசகி அம்மையார் ஆன்மீக நிலையத்தால் நோச்சிமோட்டை பிரதேசத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளாக 25 குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகளும், 2 குடும்பங்களுக்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரம், 50 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் மற்றும் தெல்லிப்பளை ஆயுள்வேத வைத்தியசாலைக்கு 80000 ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணமும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா கலந்துகொண்டு வாழ்வாதார உதவிகளையும் வழங்கிவைத்தார்.















