கண்டியில் பலாத்காரம் செய்யப்பட்ட 88 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி மரணம்!!

1062

Raped

கண்டி தெல்தெனியாவில் 88 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான 30 வயது இளைஞன் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கண்டி நகரில் உள்ள தனது வீட்டில் கடந்த ஆறாம் திகதி 88 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த இளைஞன் ஒருவர், 88 வயது நிறைந்த மூதாட்டி என்றுகூட பார்க்காமல் அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது.

டிகிரி குமரிஹாமி என்ற 5 திருமணமான பிள்ளைகளின் தாயான இவருக்கு 2 பெண் பிள்ளைகளும் 3 ஆண் பிள்ளைகளும் உள்ளனர். இவர்களில் 2 ஆண் பிள்ளைகள் பாதுகாப்புப் படைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களாவர்.

இச் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் அந்த இளைஞன் இச்சம்பவத்திற்கு பின்னர் தலைமறைவாகி விட்டாராம். உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி, கண்டியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

ஆனால் கடந்த 8ம் திகதி அந்த மூதாட்டி உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்த பொலிசார் குற்றவாளியை நேற்று கைது செய்தனர்.

இச் செய்தியை இலங்கை ஆங்கல ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளதுடன், இந்திய ஊடகங்களும் இச் செய்தியை இன்று வெளியிட்டுள்ளன.