வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பக செல்வி.சரண்யாவின் “கருவறை நோக்கி” நூல் வெளியீட்டு விழா அன்பகத்தின் நிர்வாகி சிவச்செல்வி கு.ஜெயராணி தலைமையில் இன்று(15.05.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், காதர் மஸ்தான், கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், அந்தணர் ஒன்றியத் தலைவர் ஜெயந்திநாதக் குருக்கள், பிரபாகரக் குருக்கள், தமிழ்மணி அகளங்கன், வர்த்தக சங்கத் தலைவர் திரு.ராசலிங்கம், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் சேனாதிராஜா உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.