வவுனியாவில் நடந்த விபத்தில் 8 பேர் படுகாயம்!!(படங்கள்)

450

 
மன்னார் மதவாச்சி வீதியில் சிறுநாவற்குளம் சந்தியில் கைதிகளை ஏற்றிச் செல்லும் பொலிஸ் வாகனம் விபத்துக்குள்ளாகி 8 கைதிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் 5 பேர் வவுனியா வைத்தியசாலையிலும், 3 பேர் மன்னார் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் இருந்து சிறைக்கைதிகளை ஏற்றிக்கொண்டு வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான பேரூந்தே விபத்திற்குள்ளாகியுள்ளது.

மன்னாரில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு இன்று(15.05) மாலை வவுனியா சிறைச்சாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த பேரூந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி சிறுநாவற்குளம் சந்தியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியது.

தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையின் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அப்பகுதியில் கூடி நின்ற மக்களுடன் கலந்துரையாடியதோடு, விபத்து குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

12036462_1078301935565144_5910353062327654083_n 13173726_1078310295564308_1923642167682718479_n 13174228_1078302232231781_4725421337290423288_n 13177298_1078260828902588_4803153312272927693_n 13177797_1078302265565111_8855180807105193884_n 13177840_1078302115565126_6024599199529982247_n 13220916_1078260865569251_6602716367685842286_n 13221059_1078310275564310_8258640723557624809_n 13245326_1078310345564303_2876069410076425207_n 13254606_1078302345565103_8003453115444632868_n