வவுனியா கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் வேண்டுகோளிற்கிணங்க தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கிராமங்கள் தோறும் இளைஞர் கழகங்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் மூலமான ஒருதொகை நிதியுதவி நேற்று(15.05.2016) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட தலைமைக்காரியாலயத்தில் வைத்து அன்பளிப்பு செய்யப்பட்டது.
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் சுப்பர் ஸ்டார் இளைஞர் கழகத்தின் கடினப் பந்து துடுப்பாட்ட அணிக்கான நிதியுதவியினை புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும் , வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம்(மோகன்), சுப்பர் ஸ்டார் இளைஞர் கழகத்தின் செயலாளர் சி.தர்மசீலன், கழகத்தின் ஆலோசகர்களான ர.பிரதீபன், த.தியாகு, சுப்பர் ஸ்டார் கழகத்தின் கடினப் பந்து துடுப்பாட்ட அணியின் தலைவர் எஸ்.புனிதகுமார் (பாஸ்கரன்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.