இந்த ஆண்டில் மின்னல் தாக்குதல்களுக்கு இலக்காகி பத்து பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவைரயில் பத்து பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு இடி மின்னல் தாக்குதல்கள் ஏற்படக் கூடுமெனவும், மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






