வவுனியாவில் 48 மணித்தியாலங்களாக தொடர்மழை : போக்குவரத்து பாதிப்பு!!(படங்கள்)

494

 
வவுனியாவில் கடந்த 48 மணிநேரம் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.

உக்குளாங்குளம் பிரதேசத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இவ் அனர்த்தங்கள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினை தொடர்பு கொண்ட போது,

வவுனியா பூவரங்குளத்தில் பாரிய மரம் முறிந்து விழ்ந்ததில் வவுனியா – மன்னார் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இதுவரை வவுனியா மாவட்டத்தில் வேறு எவ்வித அனர்த்தங்களும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

வவுனியா குருமன்காட்டு குளம் வான் பாய்வதுடன் தொடர்ச்சியாக மழை நீடிக்குமானல் வவுனியாவிலுள்ள ஏனைய குளங்களும் வான் பாய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

P1200456 P1200457 P1200458 P1200459 P1200460 P1200461 P1200462 P1200463 P1200464 P1200465 P1200466 P1200467 P1200468 P1200469 P1200470 P1200471 P1200472 P1200473 P1200474 P1200475 P1200476 P1200477 P1200478 P1200479 P1200480 P1200481 P1200482 P1200483 P1200484 P1200485 P1200486 P1200487 P1200488