வவுனியா பூவரசங்குளத்தில் பாரிய மரமொன்று வீதியின் குறுக்கே முறிந்து வீழ்ந்ததால் வவுனியா–மன்னார் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும்மழை காரணமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் வவுனியா பூவரசங்குளம் இலங்கை வங்கிக்கு முன்பாக பாரிய மரமோன்று வீதியின் குறுக்கே வீழ்ந்ததால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இவ் வீதியில் பயணித்த அரச பேரூந்து மரத்தினை கடந்து செல்ல முற்பட்டவேளை பாதை புதையுண்டுள்ளதாகவும். இம் மரத்தினை அகற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.