அதிக மழை காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைக்கு இன்று (16.05) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வலையக் கல்விப் பணிப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் நகர் மற்றும் முசளி பகுதியில் வௌ்ளம் புகுந்துள்ள பாடசாலைகளுக்கே இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை கொழும்பு 7 இல் அமைந்துள்ள எஸ்.ரி பிரிட்ஜெட் கோன்வென்ட்டுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையே இதற்குக் காரணம் என அந்தப் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.






