நோர்வே பயணிகள் விமானத்தில் இலங்கையர் கைதுசெய்யப்பட்டது ஏன்?

698

Flight

நோர்வே மோஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பயணிகள் விமானத்திலிருந்து இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விமானத்தில் இலங்கையருக்கும் மற்றுமொரு வெளிநாட்டவருக்கும் இடையில் நடைபெற்ற சந்தேகத்திற்கிடமான சம்பாஷணையை அடுத்து, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக நோர்வே ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரு பயணிகளும் விமான கழிவறையில் வாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் பின்னர் மன்சேஸ்டரில் விமானம் தரையிறங்கிய போது, குறித்த இருவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையிலான உரையாடலில் குண்டு என்ற வார்த்தை பிரயோகம் வெளிப்பட்டதாக விமானத்திலிருந்த பயணிகள் கேட்டதாக விமானி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விமானத்தை பரிசோதனை செய்து, எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லையென வெடி குண்டு அகற்றும் குழுவினர் கூறியதை அடுத்து, குறித்த இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.