சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரக் கணக்கானோர் பாதிப்பு!!

839

Rain

இலங்கையில் திடீரென ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக 11மாவட்டங்களில் சுமார் 4186 மக்கள் பாதிக்கப்பட்டள்ளதாக அனர்த்த நிலைய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கூடுதலான மழைவீழ்ச்சி காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி, அனுராதபுரம், புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டள்ளது.

இந்தத் தகவலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வெளியிட்டுள்ளார்.